பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை

🕔 December 12, 2023

யங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த – கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அஹ்னாஃப் ஜசீம் எழுதிய ‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார்.

அவர் சிறுவர்களிடம் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவித்ததாகவும், அவரின் இலக்கியத்தின் மூலம் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானார்.

2020 ஆம் ஆண்டு நொவம்பரில் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் அவர் கற்பித்த எக்ஸலன்ஸ் பாடசாலை மாணவர்களிடம் – தீவிரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றியதாக அஹ்னப் ஜஸீம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தப் பின்னணியில் கிட்டத்தட்ட 19 மாத தடுப்புக் காவலுக்குப் பிறகு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் டிசம்பர் 2021 இல் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அஹ்னப் ஜசீம், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மூலம், ‘சேவ் த பேர்ல்ஸ்’ தொண்டு நிறுவனத்துடன் தன்னை தொடர்புபடுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக பொய் கூறும்படி தான் வற்புறுத்தப்பட்டதாகவும் அஹ்னப் அப்போது மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்