சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு

🕔 December 9, 2023

றுமை அல்லது வேறு காரணங்களினால் சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார்.

சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளமையைப் போன்று, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்