மேன்முறையீட்டு நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

🕔 November 12, 2023

மேன்முறையீட்டு நீதிமன்றில் இரண்டு நீதியரசர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு, மூன்று பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதிகளான ஜிஹான் குலதுங்க மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோரை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரைத்துள்ளார். இதேவேளை, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மஹேன் கொபல்லாவவை – சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் பரிந்துரைத்துள்ளார்.

மேற்படி மூன்று பெயர்களில் – இரண்டு பெயர்களை அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்க உள்ளார்.

இதேவேளை, நீதியரசர் புவனேக அலுவிஹார ஓய்வுபெறவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றில் வெற்றிடமொன்று ஏற்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்