கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம்

🕔 November 6, 2023

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3இல் சித்தியெய்திய 499 பேருக்கு இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்படி நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, டி. வீரசிங்க, ஏ.எல்.எம். அதாஉல்லா, செய்யது அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் ஆர்.எம்.கே.எஸ். ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு. ஜி. திசாநாயக்க உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்