‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்
பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம், 15 சதவீதத்தில் இருந்து 18% ஆக, அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்கொள்ளப்பட்டது.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசின் வரி வருவாய் 51% அதிகரித்த போதிலும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளை இன்னும் எட்டவில்லை.
எனவே வற் வரியை அதிகரிப்பதுடன், முன்னர் வற் வரியிலிருந்து விலக்குளிக்கப்பட்ட குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் புதிய வற் அதிகரிப்பு பொருந்தும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.