அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோட்டம்

🕔 October 18, 2023

டையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு, இலக்கம் 54 கிருலப்பனை மாவத்தை எனும் இடத்துக்கு அருகில், வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சந்தேக நபர்களின் நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை எனுவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்