பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

🕔 October 17, 2023

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பராமரிக்கப்படுவதாக – பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும்.

அந்த இலக்கத்தின் ஊடாக நாட்டில்  இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக அளிக்கும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்