சிறுநீரக சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள், இரண்டு வைத்தியசாலைகளுக்கு ஐஒசி நிறுவனம் கையளிப்பு

🕔 October 15, 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் – சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல லட்சம் பெறுமதியான இயந்திரங்கள் கந்தளாய் மற்றும் பதுளை வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐ.ஒ.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் தாஸிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம், சிறுநீரக சிகிச்சையளிக்கும இயந்திரம் (dialysis) பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வு திருகோணமலை ஐ.ஒ.சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்மூலம் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளிலும் சிறுநீரக சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்களின் உயிராபத்துகள் எதிர்காலத்தில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சிறுநீரக நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், கிழக்கு ஆளுநரின் முயற்சியால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்