42 வாகனங்கள் பாவிக்கப்படாத நிலையில் 03 அதிரடிப்படை முகாம்களில் கிடப்பதாக, கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்

🕔 October 11, 2023

மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களில் 2017ஆம் ஆண்டு முதல் கொள்வனவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வாகனங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் திட்டத்தின் பணிகளுக்காக வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கூறிய வாகனங்கள் மற்றும் பிற பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்க ஐந்து ஆண்டுகளில் 178 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளன.

கணக்காய்வு அறிக்கையின்படி, மேற்படி வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தற்போது கட்டுகுருந்தவிலுள்ள விசேட அதிரடிப் படையின் பயிற்சிப் பாடசாலையிலும், ஹொரண மற்றும் கொனஹேனவில் உள்ள அதிரடிப்படை முகாம்களிலும் உள்ளன என, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்