இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது

🕔 October 10, 2023

நாட்டில் இறக்குமதி தடை தளர்த்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையும் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மாபிள்கள், துணி மற்றும் ஆடைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பின் அளவு அதிகரித்து வரும் நிலையில் கட்டம் கட்டமாக பொருட்களுக்கான இறக்குதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்