ஆயர் பேரவைக்கும் கர்தினாலுக்கும் இடையில் கருத்து வேறுபாடில்லை; பிளவு உள்ளதாக காட்ட ஜனாதிபதி முயற்சி என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு

🕔 October 6, 2023

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை விடயத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் ஒரே கருத்தையே கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை மேற்கோள்காட்டி – திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஈடுபாட்டுடன் உள்ளூர் விசாரணைக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கும் ஆயர் பேரவைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் காட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சி எடுத்துள்ளதாக அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஜேர்மன் தொலைக்காட்சிக்கு அண்மையில் ஜனாதிபதி வழங்கிய நேர்காணலின் போது கூறியபடி, அவர் தம்மையோ அல்லது ஆயர்களையோ சந்திக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி, ஒரு வருடத்திற்கு முன்னரே தம்மை சந்தித்து கலந்துரையாடியிருந்ததாக அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் ஊடகத்துக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணல்: “என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது”; சர்வதேச ஊடகவியலாளரிடம் கொதித்தெழுந்த ரணில்: அனல் பறந்த நேர்காணலை முழுவதும் படியுங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்