வாகன வருமான அனுமதிப்பத்தரம் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்: புதுப்பிக்க வேண்டியோர் என்ன செய்யலாம் எனவும் அறிவிப்பு

🕔 September 25, 2023

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. முறைமை புதுப்பிப்பு (system update) காரணமாக இந்தத் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் 27 புதன்கிழமை முதல் ஒக்டோபர் 02 திங்கட்கிழமை வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை நிறத்தப்படும்.

செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை முதல் – வருவாய் உரிமம் காலாவதியாகும் வாகனங்களை ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை அபராதம் இல்லாமல் புதுப்பிக்கலாம் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று (செப்டம்பர் 24) நள்ளிரவு முதல் வாகன வருமான அனுமதிப்பத்திரத்துக்கான ஒன்லைன் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஒக்டோபர் 06ஆம் திகதி வரை இந்த நிலை தொடரும்.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தினால் பராமரிக்கப்படும் முறைமையில் ஏற்பட்ட புதுப்பித்தலின் காரணமாக, இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்