கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம்

🕔 September 16, 2023

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய – விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த வலியுறுத்தியுள்ளார்.தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலாளர்களுக்கு கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் இன்று (16) ராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார்.

மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில், கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

கிராம சேவை உத்தியோகத்தர்களின் தற்போதைய கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நீண்ட காலமாக தமது கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்