புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

🕔 September 13, 2023

புகையிரத சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்று (13) மாலை கைவிடப்பட்டது.

புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் வேலை நிறுத்தம் மேற்கொண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது.

5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் திங்கட்கிழமை தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நேற்றைய தினம் 150 புகையிரத சேவைகள் ரத்தாகியதுடன், இன்று காலை முதல் 40க்கும் மேற்பட்ட புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தம் காரணமாக, நாடளாவிய ரீதியாக உள்ள புகையிரத நிலையங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதேவேளை, கொழும்பு கோட்டை மற்றும் மருதானை உள்ளிட்ட 32 தொடருந்து நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்