நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம்

🕔 September 8, 2023

தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று (08) காலமானார். அவருக்கு 57 வயதாகிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர். அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

நடிகராகவும் இயக்குநராகவும் ஆவதற்கு முன்பு, ராஜ்கிரண், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

தொலைக்காட்சி தொடர் நாடகத்துக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் யில் சேர்க்கப்பட்ட அவர் மரணமடைந்தார்.

இவர் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், எதிர்நீச்சல் நாடகத் தொடர் மூலம் அதிகம் அறியப்பட்டவரானார்.

யுத்தம் செய், கொம்பன் உள்ளிட்ட சுமார் 50 படங்களில் மாாரிமுத்து நடித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்