மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்

🕔 August 31, 2023

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் இன்று (31) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 43 பேர் காயமடைந்ததாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதேவேளை பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு படையயினர் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை 52 உடல்களை வெளியே எடுத்துள்ளதாகவும், பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறந்தவர்களில் குறைந்தது ஒரு குழந்தையாவது இருப்பதாகவும், தீ பெருமளவில் அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்டுகிறது.

இந்த கட்டிடம் ஒரு ‘முறைசாரா குடியேற்றம்’ என்று அவசர சேவை செய்தி தொடர்பாளர் முலாட்ஸி கூறியுள்ளார்.

இந்த கட்டிடத்தில் 200 பேர் வரை வாழ்ந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்