வசந்த கர்ணாகொட குழு அறிக்கைக்கு இணங்க, சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் 9ம் திகதி வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் – முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைக்கு இணங்க இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அதன்படி விசாரணை அறிக்கையை அண்மையில் அந்த குழு – சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.