பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான அறிவிப்பு

🕔 August 15, 2023

ல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எவரும் உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு ரகசியமாக வெளிநாடுகளுக்கு பேராசிரியர்கள் எவரேனும் சென்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என – அதன் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்ஹ கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்துக்குள் 26 வீதமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்