இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

🕔 August 9, 2023

லங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பதவிகளை இழந்ததன் பின்னர், அந்த அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமைக்காக – குறித்த குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திங்கட்கிழமை (07) நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்