சீனன்குடாவில் விமான விபத்து: இருவர் பலி

🕔 August 7, 2023

திருகோணமலை – சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படை பயிற்ச்சி வான்வெளியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் பயிற்சியளிப்பவரும் யயிற்சி பெறுபவரும் உயிரிழந்துள்ளதாக ஊடக விமானப்படையின் பணிப்பாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பிரி (PT) 6 ரக விமானம் இன்று காலை வான் பயிற்ச்சிக்காக புறப்பட்டு முற்பகல் 11.27 மணியளவில் சீனக்குடா முகாமில் விபத்துக்குள்ளானதாக குரூப் கெப்டன் விஜேசிங்க கூறினார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ – விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்