நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

🕔 July 31, 2023

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் – மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதேவேளை கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன கூறியுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த டொக்டர் நளின் ஆரியரத்ன – டெங்கு நுளம்பு பரவும் அபாயம் இன்னும் தொடர்வதாகவும் எச்சரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்