பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று, மனநல மருத்துவ நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் போசும்போதே அவர் இதனைக் கூறினார்.
அடிமையாதல் மற்றும் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுதை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவனையை தடை செய்ய வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பாடசாலைகளில் கைத்தொலைபேசியை பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு சிறப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த யுனெஸ்கோ, சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.
கொவிட் தொற்று நோயின் பின்னர் பாடசாலைகளில் கைத்தொலைபேசி பயன்பாடு, பாடசாலை முடிந்ததும் அவற்றின் பயன்பாடு, பல்வேறு வகையான டெப்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும் புத்தகம் படிக்கும் நேரமும் குறைவு. ஆசிரியர்களுடன் இருக்கும் நேரமும் குறைவு. ஒரு திரையில் தங்கள் வாழ்க்கையில் அதிக நேரத்தை செலவிடுவதால், அதற்கு அடிமையாகிவிடும் நிலைமை உள்ளது. இது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.