நீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ் முதுமாணி பட்டம் பெற்றார்

🕔 July 31, 2023

– ஐ.எல்.எம். றிஸான்-

ட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் குற்றவியல் நியாயமும் நிர்வாகமும் (Criminal Justice Administration) துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

இதற்கான பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நீதிபதி அப்துல்லாஹ், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி மற்றும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி என்பனவற்றின் பழைய மாணவராவார்.

இவர் 1984ம் ஆண்டு புனித அல்-குர்ஆனை மனனம் செய்து, அல்ஹாபிழ் பட்டம் பெற்றுள்ளதோடு, அல்-ஆலிம் பகுதி – I பரீட்சையிலும் சித்தி பெற்றுள்ளார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட அப்துல்லாஹ், 1996ம் ஆண்டு LLB பட்டம் பெற்று 1997ம் ஆண்டு சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பின்னர் 2003ம் ஆண்டு நீதவானாகப் பதவியேற்றார். 2018ம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியானார். இவ்வாறான நிலையிலேயே தற்போது முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

கல்கிஸை, மன்னார், திருகோணமலை, மூதூர், கல்முனை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் அல்ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ்நீதவானாகவும், நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்