நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

🕔 July 19, 2023

– லெம்பட் –

ன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் (19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர், மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருத்த 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை திருடி இன்றைய தினம் (19) காலை விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னர், மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை திருடி விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக நீதிமன்றின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த சான்றுப்பொருட்களான போதை பொருட்கள் திருடி விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்படும் போதை பொருட்கள் இவ்வாறு பல வருடங்களாக திருடி விற்பனை செய்யப்படுவதாகவும் சான்றுப்பொருளாக காணப்படும் ஐஸ் போதை பொருளும் திருடப்பட்டு, அதற்குப்பதிலாக அஜினாமோல்ட் கலந்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்