நீர் கட்டணம் செலுத்தத் தவறிய 90 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களின் விநியோகம் துண்டிப்பு

🕔 July 16, 2023

நீர்க்கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 90617 பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நீர் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 5277 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தினுள் 29 லட்சத்து 49 ஆயிரத்து 305 நீர் இணைப்புகளும் வங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், நீர் மற்றும் மின்சார கட்டணங்களும் உயரத்தப்பட்டுள்ளமையானது, மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்