இரண்டு மயக்க மருந்துகள் இடைநிறுத்தம்: பதில் மருந்து இன்று வருகிறது

🕔 July 12, 2023

நோயாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய இரண்டு மயக்க மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக மற்றொரு மயக்க மருந்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த மருந்துப் பொருட்கள் இன்று (13) நாட்டுக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்த மயக்க மருந்துகளை செலுத்தி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து – சுகாதார அதிகாரிகள் – இந்த மயக்க மருந்துகளின் மீது கவனம் செலுத்தினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்