நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம்

🕔 July 5, 2023

லங்கையில் விபத்துகள் காரணமாக ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 04 பேர்வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

விபத்துகள் காரணமாக, வருடமொன்றுக்கு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர், அரச வைத்தியசாலைகளில், தங்கி சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

வருடமொன்றில், 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர்வரையில், விபத்துகளினால் உயிரிழக்கின்றனர்.

அதாவது, நாளொன்றுக்கு, 32 முதல் 35 பேர்வரையில், விபத்துகளால் மரணிக்கின்றனர்.

வாகன விபத்துகள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றன.

“இது மிகவும் மோசமான நிலைமையாகும்.எனவே, இதனைத் தடுப்பதற்கு பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதே அவசியமாகும்” என தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்