வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழிற்பயிற்சி: 23ஆம் திகதி ஆரம்பம்

🕔 June 27, 2023

வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய ஜுலை மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் கோரப்படும் என தொழிற் பயிற்சி அதிகார சபை அறிவித்துள்ளது.

தொழிற்பயிற்சி அதிகார சபையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் இதற்கான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதாக, தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்சல் பிரசன்ன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

திறன்சார் பணியாளர்கள்களுக்கு (Skilled laborer) வெளிநாடுகளில் கேள்வி அதிகமுள்ள அதிவேளை, திறன்சார் பணியாளர்களாக வெளிநாடு செல்லும் போது – வேலை உத்தரவாதம், அதிக சம்பளம் ஆகியவற்றினைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்