உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்

🕔 June 27, 2023

த்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மிஹிலக்க அறையில் உத்தேச மின்கட்டண திருத்தத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது. இங்கு பொது மக்கள் தங்களது கருத்துக்களை வழங்க முடியும்.

இதற்கமைய காலை 9.30 முதல் மாலை 4.30 வரை பொது மக்களுக்கு கருத்துக்களை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்