16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: மனைவியே காட்டிக் கொடுத்தார்

🕔 June 23, 2023

ளுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் – களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜூலை 07 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மே 11ஆம் திகதி களுத்துறை பிரதேச துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பணியகத்திற்கு வந்து வாக்குமூலமொன்றை பதிவு செய்த போது கைது செய்யப்பட்டார்.

தனது கணவர் திருமணத்துக்குப் புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக, களுத்துறை வடக்குப் பொலிஸில் ஆசிரியரின் மனைவி முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

தனது கணவரின் மடிக்கணினியை சோதனையிட்ட பிறகு, அவர் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகளை மனைவி கண்டெடுத்தார்.

இந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை மீளவும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்