நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம்

🕔 June 18, 2023

நாட்டில் எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்துக்குள் 620 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும், 81 பேர் இறந்துள்ளார்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 13 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

எச்ஐவி தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 165 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அதேவேளை 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டுவரை மொத்தம் 1,520 எச்ஐவி தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்