ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,777 ரூபாய் போதுமாம்: மத்திய வங்கி தெரிவிப்பு

🕔 June 18, 2023

லங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு மற்றும் நாட்டில் பணவீக்க நிலைமைகளின் வளர்ச்சி பாரிய அதிகரிப்பை காட்டியது.

இதனால் நாட்டின் மொத்த சனத்தொகையில் 14.3 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள 2022/2023 ஆண்டறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்