ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு, ஆபாசப் படங்களை அனுப்பிய அமைச்சின் சாரதி கைது

🕔 June 16, 2023

மைச்சு ஒன்றின் ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை மற்றும் வீடியோ அழைப்புகளில் தன்னைக் காண்பித்தமை ஆகிய குற்றச்சாட்ன் பேரில், அதே அமைச்சில் பணிபுரியும் சாரதி ஒருவர் வெயங்கொடை பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறான தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.

48 வயதான சந்தேக நபர் பதுளை பிரதேசத்தை சேர்ந்த – மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

மேற்படி நிர்வாக அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகனத்தின் சாரதியாக, அவர் சேவையில் இருந்த போது சந்தேக நபர் பணிபுரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகமாகக் கருதப்படும் ஆபாசப் படங்களை தயாரித்து காட்சிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்