இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

🕔 June 16, 2023

லங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு வெளியே பஸ்ஸை ஓட்ட அனுமதிப்பதற்காக, சந்தேக நபர் 15 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டபோது கைதானார்.

குறித்த பிராந்திய போக்குவரத்து முகாமையாளருக்கு எதிராக பாணந்துறை டிப்போவின் பஸ் சாரதியொருவர் முறைப்பாடு செய்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர் நாளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்