ரயில் மோதி பாடசாலை அதிபர் மரணம்

🕔 June 12, 2023

நுவரெலியா – நானுஓயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

ரதல்ல மற்றும் கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று (ஜூன் 11) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

52 வயதான கதிர்வேலு சுப்பிரமணியம், பாடாலை மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிரமதானத்தில் கலந்து கொள்வதற்காக பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே, இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நேர்ந்த நிலையில் – ரயில் சாரதிகள் விபத்தை கவனிக்காமல் தொடர்ந்து ரயிலை இயக்கியுள்ளனர். இந்த நிலையில் ரயில் நிலைய காவலாளி ஒருவர் சம்பவம் குறித்து ரயில் சாரதிகளுக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் புகையிரத நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து உயிரிழந்த அதிபரின் சடலத்தை நானுஓயா புகையிரத நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்