சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, 04 மாதஙகளில் 03 ஆயிரம் முறைப்பாடுகள்

🕔 June 10, 2023

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் 3000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்த சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்கவிடம் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில், சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில் மூவாயிரம் முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்