கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

🕔 June 7, 2023

பாறுக் ஷிஹான்

பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று (07) நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம்.ஐ. றைசுல் ஹாதி  தலைமையில் நடைபெறகுறித்த இந்த நிகழ்வில், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம். முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் மற்றும் அரச சட்டவாதி எம். லாபீர் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இதில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் டொக்டர் என். இதயகுமார் வளவாளராக கலந்த கொண்டு – பக்கவாதம் என்றால் என்ன? ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்வது ஏன்? உணவுப்பழக்க வழக்கங்கள் பேணப்படுவது எவ்வாறு ? நீண்ட நேர தூக்கம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான விழிப்பணர்வு, பக்கவாத நோயின் தன்மை, அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பில்   விளக்கமளித்தார். இங்க நோயாளி ஒருவரும் அழைக்கப்பட்டு அவரின் அனுபவ பகிர்வும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் நீதிமன்ற பதிவாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்