288 உயிர்களைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து: நடந்தமைக்கான காரணம் வெளியானது

🕔 June 3, 2023

ந்தியா – ஒடிசாவில் இடம்பெற்ற ரணில் விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுள்ள நிலையிலேயே ஒடிசா ரணில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரயில், சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணித்ததில், இரு ரயில்களும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சுப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மேற்குவங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஒடிசா பாலாசோர் தொடருந்து நிலையம் அருகே 127 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்துக்குள் சென்றுள்ளது.

இதனையடுத்து அந்த ரயில், சரக்கு ரயிலை மோதிய நிலையில் சரக்கு ரயிலின் பெட்டிகள், அருகில் உள்ள தண்டவாளத்துக்குள் தூக்கியெறியப்பட்டன.

இதன்போது, மறுபுறத்தில் பெங்களூரில் இருந்து மேற்கு வங்காளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ரயில் தண்டவாளத்தில் தூக்கியெறியப்பட்ட நிலையில் கிடந்த சரக்கு ரயில் பெட்டிகளுடன் மோதி பாரிய விபத்தை சந்தித்துள்ளது.

இதன்போதே 288 பேர் வரை உயிரிழந்தும் 1000 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.

இவர்களில் 56 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்