440 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

🕔 June 3, 2023

பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் 440 கைதிகள் இன்று (3) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 34வது சரத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படவுள்ளவர்களில் 434 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர். 24 சிறைச்சாலைகளில் இருந்து இந்த கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (ஊடகப் பேச்சாளர்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்லேகல்லை சிறைச்சாலையில் இருந்து அதிகளவான கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 87 ஆகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்