நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது,
சந்தேக நபர் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவருபவரென பொலிஸார் கூறியுள்ளனர்.
நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 45 இலட்சம் ரூபா என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.