நாறுகிறது கல்முனை பஸ் தரிப்பு நிலையம்: கவனிப்பார் யாருமில்லை

🕔 May 20, 2023

– பாறுக் ஷிஹான் –

ல்முனையில் அமைக்கப்பட்டுள்ள  பஸ் தரிப்பு நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருவதாக மக்கள் குறை கூறுகின்றனர்.

எனவே, கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றினை புணரமைப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள்  மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

இந்த பஸ் தரிப்பு நிலைய  கூரைகள் இடிந்து விழும் நிலையிலும் புறாக்கள் பாம்புகள் விச ஜந்துக்கள் வாழ்கின்ற வாழ்விடமாகவும் துர்நாற்றம் வீசுகின்ற இடமாகவும் காணப்படுவதாகவும்   விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர  பஸ் தரிப்பிடத்துடன் இணைந்துள்ள மலசல கூடம் உடைந்த நிலையிலும் உரிய பராமரிப்பு இன்றியும் காணப்படுகின்றது.

பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள சிறு உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர், உரிய முறையில் அகற்றப்படாமையினால் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் கல்முனை பஸ் நிலையம் சகல வசதிகளுடன் நவீன மயப்படுத்தப்படவுள்ளது என அரசியல்வாதிகள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருந்தும் கூட, குறித்த இடம் – மக்களின் பாவனைக்கு பொருத்தமற்ற இடமாக மாறியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகவுள்ள கல்முனை நகர்பகுதியிலுள்ள பேருந்து தரிப்பு நிலையம்- இவ்வாறு குறைகளுடன் காணப்படுவது தொடர்பில் பொதுமக்கள் தமது  வருத்தத்தினை தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்