மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம்

🕔 May 15, 2023

மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவி நீக்கியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு;

ஜீவன் தியாகராஜா – வடக்கு ஆளுநர்
அனுராதா யஹம்பத் – கிழக்கு ஆளுநர்
அட்மிரல் வசந்த கரன்னாகொட – வடமேல் ஆளுநர்

ஏற்கனவே, இவர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்த நிலையில், இவர்கள் பதவி விலகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்