வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டோரை மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை: பயங்கரவாத சிந்தனையைத் தோற்கடிக்க இதுவே வழி: தேசியவாத முன்னணி
வடக்கு மாகாணத்திலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளவும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டுமென தேசியவாத முன்னணியின் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் – நாட்டில் நிலவும் சுமூக சூழலில், இலங்கையர் ஒவ்வொருவரதும் பூர்வீக வாழிடங்களில் வாழும் உரித்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தேசியவாத முன்னணி இவ்விடயத்தில் உறுதியுடனுள்ளது. பயங்கரவாதத்தின் இனச் சுத்திகரிப்பை ஜனநாயக அரசாங்கம் ஏற்கப்போவதில்லை. எனவே, வடக்கு மாகாணத்திலிருந்து வௌியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியமர்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட தேசியவாத முன்னணி ஈடுபட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.
வௌியேற்றப்பட்ட மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவதனூடாகவே இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த இயலும் என்றும், சிவில் சமூகத்தை வௌியேற்றிய பயங்கரவாத சிந்தனையை தோற்கடிக்க, பூர்வீக பூமிகளில் மக்களை குடியேற்றுவதே பொருத்தமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இப் பொறுப்பிலிருந்து ஒருபோதும் தமது அணி, விலகிச் செயற்படப் போவதில்லை என்றும் தேசியவாத முன்னணியின் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் தெரிவித்துள்ளார்.