விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

🕔 May 8, 2023

ந்திய விமானப்படையின் மிக் – 21 விமானம் இன்று திங்கள்கிழமை (08) இந்தியா ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் மூன்று கிராமவாசிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

சூரத்கர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஒற்றை இருக்கை கொண்ட விமானமானம், சில நிமிடங்களுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகும் இதனையடுத்து விமானி பத்திரமாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

ருப்பினும், சம்பவத்தில் மூன்று பெண்கள் இறந்துள்ளனர். சம்பவம் நடந்தபோது, இவர்கள் தமது வீட்டில் இருந்துள்ளனர். இதேவேளை இதன்போது மூவர் காயமடைந்துள்ளனர்.

‘மேற்படி விமானம் இன்று காலை வழக்கமான பயிற்சியின் போது – சூரத்கர் அருகே விபத்துக்குள்ளானது. சிறிய காயங்களுடன் விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது’ என, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்