நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது

🕔 April 27, 2023

நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் பதில் பணிப்பாளர் என்.கே. ரணதுங்க இன்று (27) தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டதால் அதிக செலவைநீர் வழங்கல் அதிகார சபை ஏற்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“மின்சாரக் கட்டண உயர்வால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் நீர் கட்டணமும் உயர்த்தப்பட்டது. மீண்டும் 2023 ஜனவரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, ஆனால் அந்த உயர்வு இன்னும் தண்ணீர் கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய மின் கட்டணத்தையடுத்து, நீர் வழங்கல் அதிகார சபை கூடுதல் செலவுகளை ஏற்க வேண்டியிருந்தது. ஆனால் எங்களால் இதை நீண்ட காலத்திற்கு சமாளிக்க முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

மின் கட்டண உயர்வால் நீர் வழங்கல் அதிகார சபைக்கு கூடுதலாக 04 ஆயிரம் கோடி ரூபா செலவாகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீரின் தேவையும் சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்