அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

🕔 April 27, 2023

ரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர்; அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் 1,347 வகையான மருந்துகளில் 150 வகையான மருந்துகளுக்கு முன்னர் தட்டுப்பாடு காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

“நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு – வருடாந்தம் 50 பில்லியன் ரூபாவை அரசு செலவிட்டது. இந்தத் தொகை 13.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும்.

“இதுமட்டுமின்றி, அமைச்சரவையின் கோரிக்கையை கருத்தில் கொண்டு 40 மில்லியன் ரூபாவை நிதியமைச்சும் வழங்கி வந்தது” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்