அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர்; அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் 1,347 வகையான மருந்துகளில் 150 வகையான மருந்துகளுக்கு முன்னர் தட்டுப்பாடு காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
“நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு – வருடாந்தம் 50 பில்லியன் ரூபாவை அரசு செலவிட்டது. இந்தத் தொகை 13.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும்.
“இதுமட்டுமின்றி, அமைச்சரவையின் கோரிக்கையை கருத்தில் கொண்டு 40 மில்லியன் ரூபாவை நிதியமைச்சும் வழங்கி வந்தது” எனவும் அவர் தெரிவித்தார்.