இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடலில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஆயினும் இலங்கைக்கு இதனால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.