ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு

🕔 April 24, 2023

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இ கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என – கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியென்சி அர்செகுலரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றின் அனுமதியை கோரியது.

நீதிமன்றில் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்ததுடன், போதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் டயானா கமகேவைக் கைது செய்ய முன்வரவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்த்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் – டயனா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இது குறித்து இன்று (24) தனது முடிவை அறிவித்த நீதிவான், ராஜாங்க அமைச்சரை உரிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

எனவே இது தொடர்பில் தாம் உத்தரவு பிறப்பிப்பது தேவையற்றது என தெரிவித்த நீதவான், வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்