‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி

🕔 April 22, 2023

ஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என அழைக்கப்படும் ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது என, அசாத் மௌலானா வழங்கிய வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக – இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இதனைக் கூறியிருந்தார்.

“இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றது.

இதிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக – இறந்த உறவுகளுக்கு நீதி வேண்டும், சதி செய்து கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று நாங்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஒரு புறம் நாங்கள் அஞ்சலி செலுத்துவதாக இருந்தாலும் கூட, இது அரசியல் லாபங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு குண்டுத்தாக்குதல் என்பதை பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையிலே பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா என்று அழைக்கப்படுபவர், இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னால் ராஜபக்சர்கள் இருந்ததாகவும், இந்தக் கொடூரமான செயலை செய்தமைக்குப் பின்னால் – தற்போதைய ராஜாங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக ஐ.நாவிலே அறிக்கை கொடுத்திருக்கின்றார்.

ஆனால், இவர்கள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்