உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும்

🕔 April 4, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு மார்ச் 09 முதல் ஏப்ரல் 25 வரைக்குமான அடிப்படை சம்பளம் வழங்கப்படும் எனவும், ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் கிடைக்கும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 03 ஆயிரத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் போட்டியிடுவதாக தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்